கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு பெற்று சேனபுர மையத்திற்கு மாற்றப்பட்ட புனர்வாழ்வு பெற்ற 76 பேர், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலுள்ள 14 பேர், மேலும் அவர்களுடன் தொடர்புடைய இராஜாங்கனையைச் சேர்ந்த 04 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்த இருவருக்கும் ஆகிய 104 பேரே இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
இன்று (12) இரவு 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,615 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,981 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 950 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 906 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர். குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 895 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை வெளிநாட்டவர் 31 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கையர் 820 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 851 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2,615 பேரில் தற்போது 623 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இதுவரை 1,981 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 99 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.