இதன்படி, இன்று மாத்திரம் உலகின் அனைத்து பகுதிகளிலும் 183,000க்கும் மேலான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் அதிகமானோர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக அமெரிக்காவில் தொற்றாளிகள் கண்டறிப்பட்டுள்ளனர். மூன்றாவதாக இந்தியாவில் அதிக தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிரேசிலில் கொரோனவைரஸினால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது.
இதன்படி அமெரிக்காவை அடுத்த எண்ணிக்கை உயிரிழப்புக்களை பிரேசில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.