கருணா தனது கட்சியின் உறுப்பினரோ அல்லது தங்கள் கட்சிக்கு தொடர்புடையவர் அல்ல என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொதுத் தேர்தலில் பொதுஜன கட்சியின் சார்பில் கருணா வேட்பாளராகவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கருணா வெளியிடும் கருத்திற்கு பொதுஜன பெரமுன கட்சி எந்த பொறுப்பும் இல்லை. அவரின் கருத்திற்கு எமது கட்சி கடுமையான கண்டனத்தை வெளியிடுவதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கருணாவுக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்பினர் பதவி ஒன்றை வழங்குவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பில் அவர் ஏதேனும் கருத்து வெளியிட்டால் அது எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை ஒரே நாளில் கொலை செய்ததாக கருணா வெளியிட்ட கருத்து அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமாக செயற்படும் கருணா, அவரின் கட்சியில் இருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.