பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராவல்பிண்டியில் சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு மூன்று வீரர்களுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இருந்தும் அவர்களுக்கு எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.
இப்படி கண்டறியப்பட்ட மூவரையும் PCB மருத்துவ குழு உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு அவர்களை அறிவுறுத்தியுள்ளதாக PCB இன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று (22) குறித்த அணியில் பங்கேற்கவிருக்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளான கிளிஃப் டீக்கன், ஸுஹைப் மாலிக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் கராச்சி, லஹோர் மற்றும் பேஷாவாரில் உள்ள மையங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவற்றின் பெறுபேறு முடிவுகள் நாளை எதிர்பார்க்கப்படுவதாக PCB தெரிவித்துள்ளது.