பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்ஃபான் கார் விபத்தில் இறந்தார் என்ற செய்தி பரவிய நிலையில், இந்தச் செய்தி போலியானது என்று அவரே விளக்கம் அளித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, சமூக ஊடகங்களில் இர்ஃபானின் மரணம் குறித்த பதிவுகள் நிரப்பப்பட்டன. இருப்பினும், பாகிஸ்தான் பந்து வீச்சாளர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார், மேலும் போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “ஒரு கார் விபத்தில் நான் இறந்ததாக சமூக ஊடகங்கள் ஆதாரமற்ற போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் பாதித்துள்ளது. மேலும் இது குறித்து எனக்கு தொலைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களிலிருந்து விலகுங்கள். எந்த விபத்தும் இல்லை, நாங்கள் நன்றாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.Some social media outlets have been spreading a baseless fake news about my death in a car accident. This has disturbed my family & friends beyond words, and I have been receiving endless calls on this. Please refrain from such things. There was no accident and we are well.— Mohammad Irfan (@M_IrfanOfficial) June 21, 2020
38 வயதான இவர் கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 போட்டியில் பாகிஸ்தானுக்கு தலைமை தாங்கினார். அவர் இதுவரை 4 டெஸ்ட், 60 ஒருநாள் மற்றும் 22 டி 20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வயிற்று வலி காரணமாக காது கேளாதோர் கிரிக்கெட் வீரர் முகமது இர்ஃபான் இறந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது, இந்து குழப்பத்திற்கு வழிவகுத்திருக்கலாம்.