கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை ஜூலை மாதம் 02ஆம் திகதியிலிருந்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார்.
எனினும் திரையறங்குகளில் 50 சதவீதமான ஆசனங்களில் அமர்வதற்கே அனுமதி வழங்கப்படும் என்றார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (25) கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.