பூசை சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரான் , வெலே சுதா போன்ற கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் 15 முக்கிய சந்தேக நபர்கள் நேற்று காலை முதல் உணவு உட்கொள்வதை தவிர்த்து வருவதாக கூறப்பட்டது.
பூசை சிறையில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டே கஞ்சிபான இம்ரான் உள்ளிட்ட 15 பேர் சிறைசாலைக்குள் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.