இலங்கையின் முதலாவது தொழிநுட்ப பீடம் நாளை திறப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் முதலாவது தொழிநுட்ப பீடம் நாளை திறப்பு!

அனைத்து வசதிகளையும் கொண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் அமையப் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது தொழிநுட்ப பீடம் நாளை (08) திறந்துவைக்கப்படவுள்ளது.

ஹோமாகம, பிடிபான பிரதேசத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் மூன்று பில்லியன் ரூபா செலவில் இந்த பீடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ள இந்த நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, பல்கலைக்கழக வேந்தர் இத்தபானே தம்மாலங்கார மகா நாயக்க தேரர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.