முழு சரக்கு விமானமாக மாற்றியமைக்கப்பட்ட ஶ்ரீலங்கன் பயணிகள் விமானம்! (Photos)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முழு சரக்கு விமானமாக மாற்றியமைக்கப்பட்ட ஶ்ரீலங்கன் பயணிகள் விமானம்! (Photos)

இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது பயணிகள் விமானம் ஒன்றினை முழு சரக்கு (Cargo) விமானமாக மாற்றியமைத்து, இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதி தொழில்களுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளது. 

இலங்கையின் ஏற்றுமதித் தொழில்களைத் தொடர்ந்து ஆதரிப்பதற்கும், கொரோனா தொற்றுநோய்களின் போது நாட்டை உலகப் பொருளாதாரத்துடன் இணைத்துக்கொள்வதற்கும், ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு பரந்த பயணிகள் விமானத்தை ஒரு பிரத்யேக சரக்கு (Cargo) விமானமாக மாற்றியுள்ளது. 

மாற்றப்பட்ட இந்த ஏர்பஸ் ஏ330 விமானம் ஜூன் 25 ஆம் திகதி முதல் தூர கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் முக்கிய இடங்களுக்கு இயக்கத் தொடங்கவுள்ளது.

இந்த விமானம் மொத்தம் 170 கன மீட்டர் சரக்கு திறன் கொண்டதாகவும், அதன் மேல் தளத்தில் 60 கன மீட்டர் சரக்கு மற்றும் 110 கன மீட்டர் கீழ் டெக்கில் கொண்டு செல்லவுள்ளது.  விமானத்தின் மொத்த ஏற்றிச் செல்ல முடியுமான பாரம் 45 மெட்ரிக் டொன் ஆகும்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.