இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது பயணிகள் விமானம் ஒன்றினை முழு சரக்கு (Cargo) விமானமாக மாற்றியமைத்து, இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதி தொழில்களுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதித் தொழில்களைத் தொடர்ந்து ஆதரிப்பதற்கும், கொரோனா தொற்றுநோய்களின் போது நாட்டை உலகப் பொருளாதாரத்துடன் இணைத்துக்கொள்வதற்கும், ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு பரந்த பயணிகள் விமானத்தை ஒரு பிரத்யேக சரக்கு (Cargo) விமானமாக மாற்றியுள்ளது.
மாற்றப்பட்ட இந்த ஏர்பஸ் ஏ330 விமானம் ஜூன் 25 ஆம் திகதி முதல் தூர கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் முக்கிய இடங்களுக்கு இயக்கத் தொடங்கவுள்ளது.
இந்த விமானம் மொத்தம் 170 கன மீட்டர் சரக்கு திறன் கொண்டதாகவும், அதன் மேல் தளத்தில் 60 கன மீட்டர் சரக்கு மற்றும் 110 கன மீட்டர் கீழ் டெக்கில் கொண்டு செல்லவுள்ளது. விமானத்தின் மொத்த ஏற்றிச் செல்ல முடியுமான பாரம் 45 மெட்ரிக் டொன் ஆகும்.