தூதுவர் ஒருவருக்குள்ள வரப்பிரசாதங்களை கருத்தில் கொண்டு அவரை பரிசோதிக்காமல் அனுப்பியதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதித் தலைவர் ரஜூவ் சூரியராச்சி தெரிவித்தார்.
குறித்த அதிகாரி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று (04) அதிகாலை 1.30 அளவில் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க,
சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் PCR பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் என தெரிவித்தார்.