குறித்த விநியோகத்தை மேற்கொண்ட பெண் ஒருவரை பொலிஸார் முற்றுகையிட்டு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஜயனி என அழைக்கப்படும் லியனகே ஜயமினி மல்காந்தி பெர்னாண்டோ ரத்மலானை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் 31 வயதான இப்பெண்ணின் கணவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருப்பதாக தெரிவித்தனர்.
அஞ்சுவின் பிறந்த நாள் சில வாரங்களுக்கு முன்பு இருந்த நிலையில், குறித்த பெண்ணிடம் அவரது பிறந்தநாளை ஒட்டி ரத்மலானை - வெல்ல எனும் பகுதியில் போதைக்கு அடிமையானவர்களுக்கு இலவசமாக போதைப்பொருள் விநியோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணின் மீது போதைப்பொருள் தொடர்பாக இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.