இலங்கையில் பாலைவன வெட்டுக்கிளிகளின் அபாயம்! அரசாங்க எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் பாலைவன வெட்டுக்கிளிகளின் அபாயம்! அரசாங்க எச்சரிக்கை!

இலங்கையிலும் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்திருப்பதாக கன்னோருவ விவசாய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள், தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால், அது குறித்த உடன் அறிவிக்கும் வகையில் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மஞ்சள் நிற புள்ளிகள் கொண்ட வெட்டுக்கிளிகளின் ஆபத்து கேகாலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பகுதிகளுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து வெட்டுக்கிளிகளின் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹம்பாந்தோட்டை வலஸ்முல்ல பகுதியிலும் வெட்டுக்கிளிகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெட்டுக்கிளிகள் குறித்து முறையிட இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, 1920 அல்லது 081-2388316 என்ற இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.