பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிசை பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீட்டிலுப்பின் மூலம் பரிசு வென்றுள்ளதாக தெரிவித்து குறித்த நபர்கள் இணையதளத்தின் ஊடாக பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரியா பிரஜைகள் மூவர் மற்றும் உகண்டா நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 15 கடன் அட்டைகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.