கத்தாரில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்கும் முயற்சியாக, உதவிகள் தேவைப்படும் அங்குள்ள இலங்கையர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கத்தாரில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ச்சியாக விநியோகித்து வருகின்றது.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்த 6,700 கிலோ (1000 பொதிகள்) உதவிப் பொருட்கள் 2020 ஜூன் 21ஆம் திகதி தூதரகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த உதவிப் பொதிகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சிறப்பு சரக்கு விமானம் கட்டணங்கள் எதுவுமின்றி 2020 ஜூன் 21ஆம் திகதி கத்தார், தோஹாவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு எடுத்துச் சென்றதன் மூலமாக, இந்தப் பணிகளில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒத்துழைத்துள்ளது.
இந்த உதவிப் பொதிகளை கத்தாரில் வசிக்கும் தேவைகளையுடைய இலங்கையர்களுக்கு தூதரகம் விநியோகிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.