குறித்த நபர் பொலன்னறுவை - மெதிகிரிய பகுதியை சேர்ந்த முன்னாள் கிராம கிராம சபை உறுப்பினர் ஒருவரான எஸ்.பி ஹேவஹெட என்பவர் ஆவார்.
குறித்த கடிதத்தில், கோவிட்19 ஐ எதிர்கொண்டு பொதுமக்களுக்கு உதவ அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்டுவதோடு, தான் ஒரு வயதான கட்டிலிலே கிடக்கும் கிழவன் என்றும், தன்னால் ஆன உதவியாக மக்களுக்கு உதவ இந்த ஐயாயிரம் நோட்டினை பெற்றுக்கொள்ளமாறு குறிப்பிட்டிருந்தார்,
எஸ்.பி ஹெவஹெடவின் அக்கடிதத்தைப் படித்த பிரதமர், ஜனாதிபதியை சந்தித்து குறித்த அந்த 5000 ரூபாயினை ஜனாதிபியிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யுமாறு பரிந்துரைத்தார்.
எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த நாளில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் தனது அலுவலகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.