வாழைச்சேனை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண் கொடூரமான முறையில் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாழைச்சேனை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண் கொடூரமான முறையில் கொலை!

மட்டக்களப்பு, வாழைச்சேனையின் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (11) இடம்பெற்றுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான வெள்ளக்குட்டி றகுமத்தும்மா (60) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் தனிமையில் வசித்து வந்த குறித்த பெண், நேற்றிரவு (10)  10.00 மணியளவில் அதே வீதியில் வசித்து வரும் அவரது மகளின் வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு  வந்ததாகவும்,  இன்று காலை அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது, கதவு திறந்த நிலையில் வீட்டின் படுக்கை அறையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள்  பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த பெண் அவ்வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் இக்கொலையைச் செய்தவர்கள் என்ன நோக்கத்திற்காக செய்தார்கள் என்பது தொடர்பிலும், இவரது வீட்டில் பொருட்கள் ஏதும் கொள்ளையிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.