அதன்படி அதில் 10 அம்சங்கள் அடங்களாக, அவை கீழ்வருமாறு,
1. இரண்டு கைகளையும் சவற்காரமிட்டு கழுவிக்க்கொள்ளல்.
2. நோயாளர்கள் மஸ்ஜிதிற்கு செல்வதை தவிர்த்தல்.
3. அல்குர்ஆன் ஓதுவதற்காக உங்கள் சொந்த பிரதியை (எடுத்துச்செல்லல்) பயன்படுத்தல்.
4. தொழுவதற்காக தங்களுக்கென விரிப்புக்களை (முஸ்ஸல்லாஹ்) எடுத்துச் செல்லல்.
5. கைலாகு செய்வதை தவிர்ப்பதுடன் சமூக இடைவெளியை பேணல்.
6. சிறுவர்களை அழைத்துச் செல்வதை முற்றாக தவிர்த்தல்.
7. முகக்கவசம் அணிதல்.
8. மஸ்ஜிதின் வாயில்களில் கூடி நிற்பதை மற்றும் கதைப்பதை தவிர்த்தல்.
9. வீட்டிலிருந்தே வுழூ செய்துக்கொண்டுச் செல்லல்.
10. இது தொடர்பில் அரசாங்கம், சுகாதாரத் துறை, வக்பு சபை மற்றும் முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலை பின்பற்றுதல்.
-அகில இலங்கை ஜமிஅத்துல் உலமா