தேசிய அடையாள அட்டை சேவை மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய அடையாள அட்டை சேவை மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

Identity Card Department
தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி முதல் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைதிட்டங்களுக்கு அமைய தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் விரைவு சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் கட்டமாக, பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் ஒரு நாளைக்கு 250 வாடிக்கையாளர்களுக்கும், காலி அலுவலகத்தில் ஒரு நாளைக்கு 50 வாடிக்கையாளர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் விண்ணப்பத்தை கிராம உத்தியோகத்தர் மூலம் சான்றளித்து பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தமக்கு எளிதான திகதி மற்றும் நேரத்திற்கு முன்பதிவு செய்து தமக்கென ஓர் எண்ணைப் பெற வேண்டும், பின்னர் அதற்கான நேரத்தில் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள குறித்த நேரத்தில் மாத்திரம் அலுவலகத்தை நாடவேண்டும்.

காய்ச்சல், சளி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் ஒரு நாள் சேவையில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.