இலங்கையில் பள்ளிவாசலில் தொழுகை நடத்த இந்திந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் பள்ளிவாசலில் தொழுகை நடத்த இந்திந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

corona prayers
முஸ்லிம்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபடுவது தொடர்பான சுற்று நிருபம் இன்று (01) வெளியிடப்படும் என வக்பு சபை தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்துள்ளார்

மத வழிபாடுகளுக்காக பள்ளிவாசல்களை மீண்டும் திறக்கும்போது பின்பற்றவேண்டிய ஒழுங்குவிதிகள் தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,


விஷேடமாக, ஒரே தடவையில் 30 பேருக்கு குறைந்த ஜமாஅத்துக்கே தொழுகையில் ஈடுபட இடமளிக்கப்படும். அத்துடன் ளுஹர் (நண்பகல் தொழுகை) தொழுகை முதல் இஷா தொழுகை வரை பள்ளிவாசல்கள் திறந்திருக்கும். சுபஹ் தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடத்திற்கு முன்னர் பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு, 45 நிமிடங்களின் பின்னர் மூடப்படும்.

மீண்டும் ளுஹர் தொழுகைக்கு 15 நிமிடத்துக்கு முன்னர் திறக்கப்படும் பள்ளிவாசல்கள் இஷா தொழுகை வரை திறக்கப்பட்டு, 45 நிமிடத்தின் பின்னர் மூடப்பட வேண்டும்.

மேலும் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட அனுமதி வழங்கப்படும் போதும் கூட்டுத் தொழுகைக்கோ ஜூம்ஆ தொழுகைக்கோ அனுமதி இல்லை. தனித்தனியாக சமூக இடைவெளியை பேணித் தொழ வேண்டும்.

அங்கத்தூய்மை (வுளூ) செய்யும் பகுதி முற்றாக (நீர்தாங்கி) மூடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த ஒழுங்குவிதிகளில் மாற்றம் ஏற்படலாம். வக்பு சபையின் வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.