மத வழிபாடுகளுக்காக பள்ளிவாசல்களை மீண்டும் திறக்கும்போது பின்பற்றவேண்டிய ஒழுங்குவிதிகள் தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
விஷேடமாக, ஒரே தடவையில் 30 பேருக்கு குறைந்த ஜமாஅத்துக்கே தொழுகையில் ஈடுபட இடமளிக்கப்படும். அத்துடன் ளுஹர் (நண்பகல் தொழுகை) தொழுகை முதல் இஷா தொழுகை வரை பள்ளிவாசல்கள் திறந்திருக்கும். சுபஹ் தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடத்திற்கு முன்னர் பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு, 45 நிமிடங்களின் பின்னர் மூடப்படும்.
மீண்டும் ளுஹர் தொழுகைக்கு 15 நிமிடத்துக்கு முன்னர் திறக்கப்படும் பள்ளிவாசல்கள் இஷா தொழுகை வரை திறக்கப்பட்டு, 45 நிமிடத்தின் பின்னர் மூடப்பட வேண்டும்.
மேலும் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட அனுமதி வழங்கப்படும் போதும் கூட்டுத் தொழுகைக்கோ ஜூம்ஆ தொழுகைக்கோ அனுமதி இல்லை. தனித்தனியாக சமூக இடைவெளியை பேணித் தொழ வேண்டும்.
அங்கத்தூய்மை (வுளூ) செய்யும் பகுதி முற்றாக (நீர்தாங்கி) மூடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த ஒழுங்குவிதிகளில் மாற்றம் ஏற்படலாம். வக்பு சபையின் வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.