முறைப்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா சார்பில் கடந்த மே மாதம் 15ஆம் திகதி சர்வதேச விதிமுறைகளை தாண்டி கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளாக ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், பாயிஸ் உட்பட பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜரானார்கள்.
தபால் சேவை பாதிப்பு காரணமாக பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டவர்களுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.