இத்தகைய நபர்கள் சில அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று தமது பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த அழுத்தங்கள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரிலேயே செய்யப்படுவதாகவும் அந்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு தெரியவந்துள்ளது.
அரச பொறிமுறைக்கு வழங்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவது குறித்து தனது பதவிக்காலத்தில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்றும், சில பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரிகள் சட்டத்திற்கு அமைவாக, பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரச பொறிமுறை செயற்பட வேண்டும் என்பதும் ஜனாதிபதியின் கருத்தாகும்.
எனவே எவரேனும் ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி அழுத்தங்களை மேற்கொள்வார்களேயானால் அது பற்றி உடனடியாக ஜனாதிபதி அலுவலகத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ. எகொடவெலேவுக்கு (பணிப்பாளர் நாயகம், உள்ளக நிர்வாகம்) 0112354479 அல்லது 0112354354 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.