இவர்களில் மனைவி மரியனுக்கு, பிறந்தது முதலே கூட்டத்தை கண்டால் ஆகாதாம். ஆளே வராத மலை முகடுகளில் வீடு கட்டி தங்குவாராம். ஒருமுறை அவர் வீட்டுக்கு ஜன்னல் மாட்டும் வேலைக்கு வந்த வென்டலோடுதான் அவருக்கு காதல் மலர்ந்திருக்கிறது. திருமணத்துக்குப் பின் இருவரும் தனிமையைத் தேடி அரிசோனா பாலைவனத்துக்கு குடி பெயர்ந்துவிட்டார்கள்.
எப்போதாவது வெளியில் சென்று உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கிவிடும் இவர்கள், வீட்டையே சூப்பர் மார்க்கெட் போல ஆக்கி வைத்திருக்கிறார்கள். சின்னச்சின்ன உணவுத் தேவைகளுக்கு விவசாயம் செய்து கொள்கிறார்கள். கோழி வளர்க்கிறார்கள். மின்சாரத்துக்கு கூட அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் சோலார் பேனல் பொருத்தி விட்டார்கள். உலகமே தனித்திரு விழித்திரு என சமூக விலகல் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் எல்லாம் அப்பவே அப்படி எனச் சொல்லும் இந்தத் தம்பதியின் வாழ்வு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.