லீசிங் நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லீசிங் நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

குத்தகை (லீசிங்) நிறுவனத்திற்கு குத்தகை வசதிகளின் கீழ் உள்ள தவணைகளை செலுத்தத் தவறியவர்களின் வாகனங்களை கைப்பற்ற அனுமதிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குத்தகை வாகனங்களை கைப்பற்றும் முன் முன்கூட்டியே பொலிஸ் நிலையத்தில் புகார் வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்க அறிவுறுத்தலாகும், ஆனால் லீசிங் நிறுவனங்கள் வாகனங்களை கைப்பற்றிய பின்னரே பொலிஸாருக்கு அறியத்தருகின்றனர்.

இனிவரும் காலங்களில் இவ்வாறு கைப்பற்றிய பின்னர் வரும் புகார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.

கோவிட் 19 விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு குழுக்களுக்கு அரசாங்கம் வழங்கிய சலுகைக் குழுவின் கீழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான குத்தகை நிவாரணம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது மார்ச் 23ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட 16/2020 சுற்றறிக்கையின் இரண்டாவது பிரிவில் ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், குத்தகை  தவணை செலுத்தாததற்காக வாகனங்களை கைப்பற்றுவது அரசாங்கத்தின் உத்தரவை மீறிய செயலாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

அதன்படி குத்தகை தவணைகளை செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.