எதிர்வரும் ஞாயிறு 14ஆம் திகதி கொழும்பின் சில பகுதிகளில் திருத்தவேளை காரணமாக 15 மணிநேர நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு 02, 03, 07, 08 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.
மேலும் கொழும்பு 01 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும்.