இன்று எவரும் அடையாளம் காணப்படவில்லை; குணமடைந்தோரில் முன்னேற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று எவரும் அடையாளம் காணப்படவில்லை; குணமடைந்தோரில் முன்னேற்றம்!

இன்று (12) இதுவரையான காலப்பகுதிக்குள் (7.30 PM) எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கொவிட்19 தொற்றுக்குள்ளான மேலும் 7 கடற்படையினர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொவிட்19 தொற்றுக்குள்ளாகி முற்றாக குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 657 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர்ந்து, கொரோனா தொற்றுக்குள்ளான 8 கடற்படையினர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதற்கமைய இலங்கையில் இதுவரையில் 1,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுறுதியான 1,196 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 670 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.