காத்தான்குடியில் இன்னும் சஹ்ரானின் மக்கள் இருக்கிறார்கள்!! -காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காத்தான்குடியில் இன்னும் சஹ்ரானின் மக்கள் இருக்கிறார்கள்!! -காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர் தெரிவிப்பு!

காத்தான்குடியில் சஹ்ரான் ஹாசீம் தற்போது உயிருடன் இல்லாமல் இருந்தாலும் இன்றும் பிரிவினைவாத வஹாப் வாதம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் பெருமளவில் கடைப்பிடிக்கப்படுவதாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு முன் நேற்று (17) சாட்சியம் வழங்கிய காத்தான்குடி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் இதனை தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 45 முதல் 50 சூஃபி அல்லாத பள்ளிவாசல்கள் உள்ளதாகவும், அதில் வஹாப் வாதத்தை கடைப்பிடிக்கும் 10 முதல் 15 பள்ளிவாசல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தந்த வஹாப் வாதத்தையுடைய பள்ளிவாசல்களில் சுமார் 15,000 உறுப்பினர்கள் வரையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்திய மௌவிகள் போதனைகளுக்காக காத்தான்குடி பகுதிக்கு வந்ததாகவும் அதில் தமிழக தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் என தெரிவிக்கப்படும் PJ எனப்படும் ஜெயினுலப்தீனும் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் ஒழிக்கப்பட்டாலும், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் (SLTJ), சிலோன் தௌஹீத் ஜமாத் (CTJ) ஆகிய அமைப்புகள் இன்றும் பகிரங்கமாக பிரிவினைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடியில் அரபு மற்றும் மதரஸா பாடசாலைகளில் வஹாப் வாதம் கற்பிக்கப்படுவதாகவும், வஹாப் வாத மற்றும் பிரிவினைவாத பள்ளிவாசல்கள் நாட்டில் இன்றும் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு முதல் காத்தான்குடியில் அரபு மொழியில் பெயர் பலகைகள் நகர சபையால் வைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அந்த நகரசபையின் தலைவராக வஹாப்வாத சித்தாந்தத்தை கொண்ட "அஸ்வர்" என்ற நபர் இன்னும் பதவியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேபோல் காத்தான்குடி பிள்ளைகள் 6 ஆம் மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்குப் பின்னர் அரச பாடசாலைகளுக்கு செல்வதில்லை என்றும் மாறாக அவர்கள் மதரஸா மற்றும் அரபு பாடசாலைகளில் கற்பதாகவும் அவர் ஆணைக்குழுவில் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.