இந்திய - சீன எல்லை மோதல்; இந்திய இராணுவத்தினர் 20 பேர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய - சீன எல்லை மோதல்; இந்திய இராணுவத்தினர் 20 பேர் பலி!

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன இராணுவத்தினரிடையே நேற்று (15) இரவு நடந்த மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேரும் இராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்றும் இராணுவ வீரர்களின் கைகலப்பே இந்த மரணங்களுக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலின்போது சீன தரப்பிலும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன இராணுவத்தினரை இந்திய இராணுவத்தினர் தாக்கியதாக சீனா குற்றம் சாட்டுகிறது என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இந்திய மற்றும் சீன இராணுவங்களின் மூத்த அதிகாரிகள் இடையே பதற்ற நிலையினை தணிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.