இந்நிலையில், இலங்கையின் கத்தோலிக்க மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் கார்டினலின் அர்ப்பணிப்பை சஜித் பிரேமதாச பாராட்டியதுடன் அந்த சமூகத்திற்கு தனது முழுமையான ஆதரவை தெரிவிப்பார் என வாக்குறுதியளித்துள்ளார்.
மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஹரின் பெர்னாண்டோ மற்றும் கார்டினலுடன் அண்மையில் நடந்த சில சம்பவங்களை நேரடியாக பேசி புரிந்துணர்வை கொண்டுவரும் நோக்கத்துடன் இந்த சந்திப்பை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இறுதியில் இரு தரப்பினரிடமிருந்தும் நல்ல புரிதலுடன் உரையாடல்கள் முடிவடைந்தன.', என்றார்.