பாமன்கடையில் இருந்து மாயா சுற்றுவட்டம் திசையில் பயணித்த வாகனம் ஒன்று எதிர் திசையில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலத்த காயமடைந்த வாகன ஓட்டுனர்கள் களுபோவில வைத்தியசாலை மற்றும் நாரஹேன்பிட தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிலியந்தல, கொரகபிட்டிய பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.