இனவாதமின்றி ஐ.தே.க முன்னோக்கி செல்லும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனவாதமின்றி ஐ.தே.க முன்னோக்கி செல்லும்!

எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இனவாதமற்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா, எந்தேரமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி இன்று இரண்டாக பிளவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


அதனை ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் இறுதியில் இரு குழுக்களாக தேர்தலில் போட்டியிட வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டிற்குள் எந்த சந்தர்ப்பத்திலும் இனவாதம் இருந்ததில்லை என தெரிவித்த அவர், தற்போது கட்சிக்கு உள்ளேயும் அந்த நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.