கடந்த கால அரசாங்கம் என்னை பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார் தெரிவித்தது! -ஞானசார தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடந்த கால அரசாங்கம் என்னை பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார் தெரிவித்தது! -ஞானசார தேரர்

கடந்த ஆட்சிக் காலத்தில் நான் பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தினால் தன்னுடைய படங்கள் மற்றும் பெயர் பேஸ்புக் கணக்கில் தணிக்கை (Censor) செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணையத்தின் முன் சாட்சியமளித்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

நாட்டின் இஸ்லாமிய தீவிரவாத நிலைமை குறித்து நான் பலமுறை தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், இது தொடர்பாக ஏதாவது கவனம் செலுத்தியவர் அப்போதைய முன்னாள் பாதுகாப்பு செயலாளரான இருந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாத்திரமே என அவர் தெரிவித்தார்.

தற்போது அவர் இந்நாட்டின் ஜனாதிபதி என்பதால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சாதகமான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கையுள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.