மர்மமான முறையில் கூட்டம் கூட்டமாக இறக்கும் காகங்கள்!! பொலன்னறுவையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மர்மமான முறையில் கூட்டம் கூட்டமாக இறக்கும் காகங்கள்!! பொலன்னறுவையில் சம்பவம்!

crows die in polannaruwa
பொலன்னறுவை - மன்னம்பிட்டி, வெலிகந்தை, நெலும்வெவ ஆகிய கிராமங்களில் இன்று (15) காலை முதல் காகங்கள் அதிகளவில் இறந்து வருவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

காகங்கள் இறப்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இது குறித்து பிரதேச செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி கூட்டம் கூட்டமாக இறக்கும் காகங்கள் பிரதேசத்தில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதாகவும் மரணிக்கும் தருவாயில் இருக்கும் காகங்களுக்கு கிராம வாசிகள் தேங்காய் பால் கொடுத்து அவற்றின் உயிர்களை காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மரங்களில் இருக்கும் காகங்கள் திடீரென இறந்து விழுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காகங்கள் இறப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவித்து துரிதமான விசாரணைகளை நடத்தவுள்ளதாக வெலிகந்தை பிரதேச செயலாளர் ஹைரு நிஷா தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.