
பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தேர்தல் திகதி தொடர்பில் அநேகமாக நாம் தீர்மானித்துவிட்டோம். எனினும் எம்மிடம் கலந்துரையாடல்களை கோரியுள்ள அரசியல் கட்சிகளிடம் இந்த வாரத்தினுள் கலந்துரையாடல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
ஜூன் 20 தேர்தல் திகதி இன்னும் ரத்துச் செய்யப்படவில்லை. எனினும் அது தொடர்பான வர்த்தமானி இவ்வாரத்தினுள் வௌியிடப்படும். நிச்சயமாக அது ஜூன் 21 ஆக இருக்காது.
மேலும், வேட்பாளர் பெயர் பட்டியல் மற்றும் விருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி அறிவித்தல் நாளை வௌியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.