பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி இந்த வாரம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி இந்த வாரம்!!

பொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை இவ்வாரத்திற்குள் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் திகதி தொடர்பில் அநேகமாக நாம் தீர்மானித்துவிட்டோம். எனினும் எம்மிடம் கலந்துரையாடல்களை கோரியுள்ள அரசியல் கட்சிகளிடம் இந்த வாரத்தினுள் கலந்துரையாடல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

ஜூன் 20 தேர்தல் திகதி இன்னும் ரத்துச் செய்யப்படவில்லை. எனினும் அது தொடர்பான வர்த்தமானி இவ்வாரத்தினுள் வௌியிடப்படும். நிச்சயமாக அது ஜூன் 21 ஆக இருக்காது.

மேலும், வேட்பாளர் பெயர் பட்டியல் மற்றும் விருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி அறிவித்தல் நாளை வௌியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.