கண்ணியத்திற்குறிய கல்லூரி அதிபர்மார்களுக்கு,
எங்களது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம்,
மர்கஸ் உபை இப்னு கஃப் எனும் பெயரில் இயங்கும் (ஹைஅதுல் குர்ஆன் அல் கரீம்) அல்குர்ஆன் உயர்கற்கை நெறிக்கான எமது நிறுவனம் 2020 - 2021 இற்கான புதிய மாணவர்களை சேர்க்க ஆரம்பித்துள்ளதை தாங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
எனவே உங்களது கல்லூரியில் தகுதியுடைய மாணவர்களை ஆர்வமூட்டி, எமது நிறுவனத்தில் இணைய விரும்பும் மாணவர்களை பின்வரும் தகவல்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1. முழுப்பெயர் -
2. கல்லூரி -
3. பட்டமளிப்புச் சான்றிதழ்
4. ஹிப்ழு சான்றிதழ் அல்லது அதற்கு சமமானது
5. தொலைபேசி இலக்கம் -
மேற்கூறிய தகவல்களை ஆங்கிலத்தில் பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
+94773760591
நேர்முகப்பரீட்சை, எழுத்துப்பரீட்சை, நுழைவுத்திகதி மற்றும் நுழைவுத்தகமைகள் தொடர்பான விடயங்கள் கொவிட் 19 நோயினால் சீரற்றிருக்கும் நிலைமைகள் வழமைக்கு திரும்பிய பின்னர் அறிவிக்கப்படும்.
குறிப்பு : எமக்கு அனுப்பிவைக்கப்படும் தகவல்களைப்பெற்று உறுதிப்படுத்தி
விண்ணப்பதாரர்களுக்கு பதில் வழங்கப்பட்டாலே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கணிக்கப்படும்..
விண்ணப்ப முடிவுத்திகதி 30/06/2020.
வல்லவன் அல்லாஹ்வை எம்மனைவரின் நற்காரியங்களை பொருந்திகொள்ளவும், இந்த நோயிலிருந்து பாதுகாக்கவும் வேண்டி பிரார்த்திக்கிறோம்.
வஸ்ஸலாம்!
இப்படிக்கு,
கல்லூரி முதல்வர்
அஷ்ஷெய்க் முஹம்மத் செளமி கரீம் (ரஷாதி)
தகவல்: அப்துல்லாஹ் பஸ்லூன்