தேவையானால் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு அப்பணிகளை செய்யலாம்.
அப்படி மீறி அரசியல் வேலைகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த இந்த விதிகளை மீறும் பட்சத்தில், அரச நிறுவனங்களின் தலைவர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கம் ஒரு வலுவான அரசு, ஒரு வளமான பொருளாதாரம், ஒரு நியாயமான சமூகம் மற்றும் குறுகிய அரசியல் நோக்கங்களிலிருந்து ஒரு பரோபகார அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிப்பதில் உறுதியாக உள்ளது. இந்த நோக்கங்களை அடைய ஊழியர்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பை அவர் எதிர்பார்க்கிறார்.