விசாரணைகளுக்காக மஹிந்தானந்த வீட்டுக்கே சென்ற CID யினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விசாரணைகளுக்காக மஹிந்தானந்த வீட்டுக்கே சென்ற CID யினர்!

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிவிப்பொன்றை மேற்கொண்ட முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவு வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளது.

குறித்த விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு நாவலப்பிட்டியில் அமைந்துள்ள அவரின் இல்லத்திற்கு இன்று காலை 6 மணிக்கு சென்று இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியை பணத்திற்காக தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பு தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்க விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த தினம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.