நாள் முடிவில் மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த 21 பேர் உறுதி; மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாள் முடிவில் மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த 21 பேர் உறுதி; மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்வு!

நேற்றைய நாள் முடிவில் இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,991 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த அனைவரும் அமெரிக்காவில் இருந்து வருகை தந்தவர்கள் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,548 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.