வெற்றி பெறுவதில் நம்பிக்கை இழந்த முன்னைய அரசாங்கம்; தேர்தல் இடம்பெற தாமதத்திற்கு காரணம்! -பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெற்றி பெறுவதில் நம்பிக்கை இழந்த முன்னைய அரசாங்கம்; தேர்தல் இடம்பெற தாமதத்திற்கு காரணம்! -பிரதமர்

பாராளுமன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நேற்று (23) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக மக்கள் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபை தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்த நம்பிக்கையின்மை காரணமாக முன்னைய அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்தவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன் கூடிய விரைவில் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல் நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டமை நியாயமற்ற செயல் என தெரிவித்துள்ள பிரதமர் அவ்வாறு ஒத்திவைத்தமையை கண்டித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அபிவிருத்தி திட்டங்கள் குறைவடைந்தன எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.