ஜனாதிபதி பெயரை பயன்படுத்தி சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பொதி! உடன் விசாரணைக்கு உத்தரவு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி பெயரை பயன்படுத்தி சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பொதி! உடன் விசாரணைக்கு உத்தரவு

ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடைய அதிகாரி என அடையாளப்படுத்திக்கொண்டு, சீனாவில் இருந்து ஸ்ரீலங்கான் ஏர்லைன்ஸ் மூலம் பொதி ஒன்றை இலங்கைக்கு கொண்டுவந்த நபர் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனா, ஷாங்காயில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பொதியொன்று கொண்டு வரப்பட வேண்டும் என அந்த அதிகாரி ஸ்ரீலங்கான் ஏர்லைன்ஸுக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், அந்த பொதியை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, ஷாங்காய் விமான நிலைய ஊழியர்களால் பெறப்பட்ட பொதி பின்னர் ஸ்ரீலங்கான் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது,

பின்னர், அதை இலங்கைக்குக் கொண்டு வந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை விமான நிலைய ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொதி பின்னர் பேக்கேஜ் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது, அதன் பிறகு குறித்த நபர் பொதியை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைது செய்யுமாறு பாதுகாப்பு படையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.