பாராளுமன்றத்தில் பலம் கிடைக்கவிட்டால் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் எனது நிலைமையே ஏற்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்றத்தில் பலம் கிடைக்கவிட்டால் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் எனது நிலைமையே ஏற்படும்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்தின் பலம் கிடைக்காது போனால் நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் எனஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார் . மேலும் தெரிவிக்கையில் , ஆறுமாதங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்தனர். கோட்டாபய ராஜபக்சவை பொதுஜன பெரமுனவின்மொட்டுச் சின்னத்தில் மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். பாராளுமன்றத்தின் பலம் தற்போதைய ஜனாதிபதிக்கு கிடைக்காதுவேறு தரப்புக்கு சென்றால் நாட்டில் என்ன நடக்கும்?


நாடு பெரிய நெருக்கடியை நோக்கி செல்லும் . இதில் சிறந்த அனுபவம் எனக்குள்ளது . நாடாளுமன்றத்தில் பலமின்றியே சுமார் 5 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர் என்ற வகையில் எனக்கு அனுபவம் இருக்கின்றது. எனது அரசாங்கத்தின் பிரதமர்மற்றும் அமைச்சரவையில் எனக்கு பெரும்பான்மை இருக்கவில்லை . இந்த நிலைமையான நாடு பின்நோக்கி சென்ற பல சம்பவங்கள்நடக்க காரணமாக அமைந்தது மோதல்கள் ஏற்பட்டன.

நாட்டில் தற்போதுள்ள மக்களுக்கும் நாளை பிறக்க போகும் குழந்தைகளுக்காகவும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அரசாங்கம்யாருடையது என்பது இங்கு பிரச்சினையல்ல. எந்த நிறம் என்பதும் பிரச்சினையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.