பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளார்.
அதில் தெறிவிக்கப்பட்டிறுந்தாவது,
“வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; உடலில் கடும் வலி எற்பட்டது. நான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக எனக்கு COVID-19 இருப்பது தெரியவந்தது. விரைவாக மீண்டு வர உங்கள் பிரார்த்தனை தேவை, இன்ஷா அல்லாஹ்" என்று 40 வயதான அப்ரிடி ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா வைரஸின் பரவலுடன் பாகிஸ்தானில் பொதுமக்களினது நிலைமை மோசமானதால், அவரின் தொண்டு நிறுவனத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.