இதன்படி 12 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு போஷாக்கு நிறைந்த உலர் உணவு பொதியொன்றை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக மாணவர்களின் வீடுகளுக்கே குறித்த உலர் உணவு பொதி அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.