இன்று 35 பேர் குணமடைந்த நிலையில் மேலும் 05 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,889!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று 35 பேர் குணமடைந்த நிலையில் மேலும் 05 பேர் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 1,889!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 35 பேர் குணமடைந்துள்ளதோடு, மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கடற்படை மற்றும் அவர்களது உறவினர்கள் 922 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்களில்  தற்போது சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 589 ஆகும்.

இன்று (14) பிற்பகல் 4.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,287 ஆக அதிகரித்துள்ளதோடு, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,889 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.