தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்!

ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து இது தொடர்பில் முறைப்பாடு தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமை காரணமாக பஸ்களில் ஆசன எண்ணிக்கைகளுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில் சில தனியார் பஸ்களில் ஆசன எண்ணிக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.