டீயில் சீனியின் அளவு குறைவு என்பதால் மனைவியை கொன்ற கணவன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டீயில் சீனியின் அளவு குறைவு என்பதால் மனைவியை கொன்ற கணவன்!

இந்தியாவில் டீ-யில் சீனியின் அளவு குறைவாக இருந்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார் (40). இவரது மனைவி ரேனு(35), மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

இன்று காலை வழக்கம் போன்று, ரேனு பப்லு குமாருக்கு டீ போட்டு கொடுத்துள்ளார், அதில் சீனியின் அளவு குறைவாக இருந்ததால் இருவருக்கும் சண்டை வந்துள்ளது.


வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பப்லு குமார், சமையலறை கத்தியால் ரேனுவின் கழுத்தை அறுத்துள்ளார்.

வலியால் ரேனு கதறித்துடிக்க மூன்று பிள்ளைகளும் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.


தகவலறிந்து வந்த பொலிசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் தலைமறைவான பப்லுவை தேடி வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.