கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

கொரோனா வைரஸிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று (06) மேலும் 33 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவுத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா வைரஸ தொற்றுக்கு உள்ளாகிய 898 பேர் வைத்தியசாலைகளில் தொடந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பதோடு, இந்த தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.