சுமார் 6000 ஊழியர்களை கொண்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்களில் 500 ஊழியர்கள் ஓய்வு பெறுவதன் மூலம் பணிநீக்கம்செய்யப்படவுள்ளதாக ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் அசோக பதிரகே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இருப்பினும், ஓய்வூதிய திட்டத்திற்கு அதிகாரிகளின் ஒப்புதல் தேவை என்றும் தலைவர் கூறினார்.
கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில், ஶ்ரீலங்கன் நிறுவனம் ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்டஒப்பந்த மற்றும் சாதாரண அடிப்படை தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து சம்பளத்தை குறைத்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்கனவே ஒப்புதல் அளித்த வணிகத் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறது.
இரு உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கான வணிகத் திட்டம் தற்போது நடைமுறையில்இருந்தாலும், எதிர்காலத்தில் கடன்களைப் பெறுவதற்கு விமான நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியினை பெற வேண்டும்என்று அவர் மேலும் தெரிவித்தார்.