பல்வேறு நாடுகளில் வாழும் கோவிட் - 19 நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியினை கண்காணித்து வரும் லண்டன் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் மருத்துவ நிறுவனம் மற்றும் இலங்கையின் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து நடத்தும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வுகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் 10 மில்லியன் ரூபாயை அன்பளிப்புச் செய்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஊசி மருந்து தொடர்பான மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டமை தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹூல்டன் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.