பொலிஸ் அதிகாரியின் உயிரைப் பறித்தவர் ரத்வத்த குடும்பத்தினை சேர்ந்தவர்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் அதிகாரியின் உயிரைப் பறித்தவர் ரத்வத்த குடும்பத்தினை சேர்ந்தவர்!!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரூ. 79 இலட்சத்தினை கொள்ளையடித்த வைத்தியரை திரத்திப் பிடித்த பொலிஸ் அதிகாரிவிபத்துக்குள்ளான போது, வாகனத்தினை எடுத்துச் செலுத்தியவர் ரத்வத்த குடும்பத்தின் உறவினர் என தெரிய வந்துள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி மற்றும் இன்னுமோர் பொலிஸ் அதிகாரி பயணம் சென்ற மோட்டார் சைக்கிள் கடந்த 11 ஆம் திகதிகொழும்பு ஹெவ்லொக் பிரதேசத்தில் டிபெண்டர் வாகனமொன்றுடன் மோதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்உயிரிழந்துள்ளார்.

குறித்த டிபெண்டர் வாகனத்தினை செலுத்திய நபர் சட்ட கல்வி கற்கும் அஷான் ஹரிந்த கடுகஹ ரத்வத்தே என்பவராவர்.


வாகன விபத்து தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் வாகன விபத்து தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்படுகையில் அவரின் உறவினர் தொடர்பாக எதுவும்தேடிக்கப்பார்க்கப்படவில்ல என பொலிசார் தெரிவித்தனர்

குறித்த நபர் மீது சட்டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலொஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.