கொரோனா பரவல் காரணத்தினால் இலங்கைக்கு வர முடியாமல் பாகிஸ்தானில் இருந்து 129 நபர்கள் இன்று (15) அதிகாலை கராச்சியிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன் விசேட விமானத்தின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
இவ்விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்ததும் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அப்பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை விமான நிலைய அருகிலுள்ள நான்கு ஹோட்டல்களில் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.